தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி அந்த நாட்டுடனான தூதரக உறவை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன. இதன் காரணமாக கட்டார் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சவூதி, ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் கட்டார் நாட்டுடனான தரைமார்க்க எல்லைப்பகுதியை மூடியது. இந்நிலையில் தற்போது கட்டாருடனான தரைமார்க்க எல்லைப் பகுதியை சவூதி நிரந்தரமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.