A+ A-

வில்பத்தை காடழிப்பை உறுதிசெய்தால் பதவி விலகுவேன்: அமைச்சர் பாலித ரங்கே


வில்பத்து வனப் பிரதேசத்துக்குரிய காணியில் காடழிப்புச் செய்து கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார, வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இதுதவிர, புக்குளம் கடற்ழெலில் அமைப்பொன்றும் அமைச்சருக்கும் பொது மக்களுக்கும் எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடு பொய்யானது என தெரிவித்து முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியுமாயின் அரசியலிலிருந்து விலகிக்கொள்வதாக அமைச்சர் ரங்கே பண்டார அறிவித்துள்ளார். அவ்வாறு நிரூபிக்க தவறின் ஆனந்த சாகர தேரர் தனது காவியுடையை கலைய வேண்டும் எனவும் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

இன்னும் இரு வாரங்களுக்குள் பாஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கும் சூழலியல் அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.