A+ A-

மகிந்த அமரவீர நொடியில் உயிர்தப்பிய அதிசயம்: விமான நிலையம் தெரியாது சுற்றிய விமானி


வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த இலங்கை விமானப்படை விமானத்தின் விமானிக்கு பலாலி விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய நிலையில் தரையிறங்கும் போது விமானத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த போதிலும், தலைமன்னர் நோக்கி விமானி விமானத்தை கொண்டு சென்றுள்ளார். பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக தலைமன்னார் தீவுக்கு அருகில் விமானம் செல்வது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் செல்லும் வழி தனக்கு தெரியாதென விமானி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கூகிள் வரைப்படத்தின் உதவியுடன் விமானத்தை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கொழும்பில் இருந்து பலாலி செல்ல 45 நிமிடங்கள் மாத்திரமே செலவிடப்படுகின்ற நிலையில், நேற்றைய தினம் விமான நிலையத்தை சென்றடைய 2 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய் விட்டமையே ஆபத்தான நிலைமைக்கு முக்கிய காரணமாகியுள்ளது.

அதன் பின்னர் அமைச்சரின் அதிகாரிகள் கொழும்பில் இருந்து இரண்டு வாகனங்களை வரவழைத்துள்ளனர். அதற்கமைய மீண்டும் நேற்றிரவு வாகனத்தில் அமைச்சர் கொழும்பிற்கு சென்றுள்ளார்.