தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் பிரதிநிதித்துவ உறுப்பினரான ஏ.எம் ஆசிக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் (27) 13ம் வட்டாரத்தில் 6ம் குறுக்கில் நடந்த கட்சிக்கூட்டத்தில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது கருத்தில்
வீட்டுத்திட்டம் மத்திய அரசால் வழங்கமுடியாது எனவும் ஆனால் குறித்த வீட்டுத்திட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரம் தான் வழங்க முடியும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அதிகாரங்கள் தங்களுக்குத்தான் இருப்பதுபோன்றும் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தங்களால்தான் நடைபெற்றது போன்றும் உண்மைகளை தரிவுபடுத்தி கூறி வருகின்றார்.
அப்படியாயின் இந்திய வீட்டுத்திட்டத்திலும் பின்னர் வந்த 8 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் மற்றும் வடக்குச்செயலணி ஊடாக யாழ் முஸ்லிம்களிற்கு வந்த 200வீட்டுத்திட்டத்திலும் அம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஏன்? என இவரிடம் கேட்க விரும்புகிறேன்.
கூட்டமைப்பிடம் அதிகாரங்கள் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் எமது மக்களை அலைக்கழித்தது ஏன்? என கேட்க விரும்புகின்றேன். அத்துடன் நான் மக்களாகிய உங்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் உங்களுடைய கழுத்தில் நீங்களே தூக்கு மாட்டியதற்கு சமனாகும்.
ஏனென்றால் இவர்களுடைய நீண்ட நாள் திட்டம் தான் எமது மக்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டி எம் மக்களை அலைக்கழிப்பதுடன் அதனால் நாமது மக்கள் காணிகளை விற்றுவிட்டு விரக்தியினால் வாழவைத்த பிரதேசத்தை நோக்கி சென்று விடுவோம் என நினைக்கின்றனர்.
அத்துடன் இறுதியில் எம்மை வைத்தே எம்மை இனச்சுத்திகரிப்பு செய்வதே இவர்களின் திட்டமாகும் என தெரிவித்துக்கொள்கின்றேன்.யாழ் ப்பாண முஸ்லீம் மக்கள் குறித்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் என உரிமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்
