A+ A-

அமைச்சரவையில் மாற்றம். புதிய அமைச்சர்கள் விபரம்





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ள  நிலையில், இன்று (25) காலை 11.00 மணிக்கு அமைச்சரவை மாற்றம் ஆரம்பாகியது.

அதன்படி,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல அரச நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம்  உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாஹல ரத்னாயக்க  இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஹரின் பெர்னாண்டோ டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ரவிந்திர சமரவிக்ரம வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பியசேன கமகே  இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அஜித் பி. பெரேரா சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்ஷ டி சில்வா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜே.சி அலவத்துகொட உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தொடர்பில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் தெரிவித்துள்ளார்.