ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் கௌதா ஆகியோருக்கிடையே சினேகபூர்வ சந்திப்பு இன்று (14) அவரது அலுவகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப தலைவருமான எம்.எச்.எம். சல்மான் மற்றும் FEED நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் சர்வதேச தொடர்பாடலுக்கான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அம்ஜத் அஸ்ஹரியும் கலந்துகொண்டனர்.