A+ A-

அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் கண்டி வி­ஜ­யமும் நட­வ­டிக்­கைகளும்










கண்­டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட நிலையில், ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று (05) உட­ன­டி­யாக சம்­பவ இடத்­துக்குச் செல்­வ­தற்கு உலங்கு வானூர்­தியை நாடினார். எனினும், அது கிடைக்­காத கார­ணத்­தினால் நேற்று பிற்­பகல் 4 மணியள­வில் தரை மார்க்­க­மாக கண்டியை சென்­ற­டைந்தார்.

சம்­ப­வ இடங்­க­ளுக்கு நேரில் செல்­வது உங்­க­ளுக்­கு பாது­காப்­பில்லை. அதனால் ­உள்ளே செல்­­ல­வேண்டாம் என்று கண்டி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க, அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மிடம் தெரி­வித்­தார். எனினும், அந்த எச்­ச­ரிக்­­கை­யை பொருட்­ப­டுத்­தாது அமைச்சர் சம்­பவ இடங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்­டார்.

பிற்­பகல் 4 மணி தொடக்கம் நள்­ளி­ரவு 2 மணி­வரை சம்­பவ இடங்­களில் இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்­கி­ருந்­த­வாறே அங்­கி­ருந்­த­வாறே ஜனா­தி­பதி மற்­றும் பிர­த­ம­ரை மீண்டும் தொடர்­பு­கொண்­டு கள­நி­ல­வ­ரங்­களை எடுத்­துக்­கூறி பாது­காப்பை பலப்­ப­டுத்தி, உட­ன­டி சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தெரி­வித்தார். இதே­வேளை, வெளிநாட்டு தூத­ர­கங்­க­ளு­ட­னும கண்டி நில­வ­ரத்தை எடுத்­துக்­கூ­றி­னார்.

திக­ன:

முதலில் திகன பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர், கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்றவற்றை நேரில் சென்று பார்­வை­யிட்டார். அங்­கி­ருந்­த­வாறே ஜனா­தி­பதியை தொடர்­பு­கொண்­டதன் மூலம் இரா­ணு­வத்­தினர் சம்­பவ இடங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­ட­னர்.

பா­திக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­பங்­களையும், பள்­ளி­வா­சல் நிர்­வா­கி­க­ளையும் நேர­டி­யாக சந்­தித்த அமைச்­சர் கல­நி­ல­வ­ரங்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்டார். சட்­டமும் ஒழுங்கும் சரி­யான முறையில் பேணப்­ப­டா­மை­யினால், பாதிக்­கப்­­பட்ட முஸ்லிம்­கள் ஆத்­தி­ரத்­து­டனும் ஆவே­சத்­து­டனும் இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. எங்­க­ளுக்கு அபி­வி­ருத்­திகள் தேவை­யில்லை, எங்­க­ளது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துங்கள் என மக்கள் அமைச்­ச­ரிடம் தெரி­வித்­த­னர்.

அங்­­குள்ள பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், சம்­பந்­தப்­பட்ட உயரதிகாரிகளுடன் கதைத்­து, முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாத வண்ணம் ஒவ்­வொரு சந்­தி­க­ளி­லும பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. அத்­துடன் பள்­ளி­வா­சல்­க­ளை அண்­டிய பகுதி­களில் இரா­ணு­வத்­தினர் களமறிக்­கப்­பட்­ட­னர்.

கட்­டு­கஸ்­தோட்­டை:

கலகக்காரர்களின் தாக்குதல் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் பரவியபோது, உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த அமைச்சர் ரவூப் ஹக்­கீம் நிலைமையை உட­ன­டி­யாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்­குள்­ள முஸ்லிம்களின் சில வர்த்தக நிலையங்களும், வீடுகளும் தாக்கப்படும்குள் அதிரடியாக செயற்பட்டு, பொலிஸார் உடனடி­யா­க ஸ்தலத்துக்கு வரவழைக்­கப்­பட்­­ட­னர். இதனால், கலகக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

அமைச்சர் அங்­கி­ருந்து வெளியேறிச் சென்ற பின்னர், குருநாகல் வீதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிவாசல் கண்ணாடிகள் சிறு சேதமடைந்துள்ளன. இதனால், இரண்டாவது தடவையாக அப்பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், பள்ளிவாசலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்திய­துடன், இராணுவத்தின­ரையும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தினார்.

மடவளை:

மடவளை பிரதேசத்திலும் தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சம் காணப்படுவதால், ஊருக்குள் நுழையும் பிரதேசங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடைபெறாதவாறு பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அக்­கு­றணை: 

அக்குறணை ஹஸனா பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்­கீம், பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலருடன் தற்போதைய பிரச்சினை தொடர்பாக கலந்­து­ரை­யா­டினார். 

அக்குறணை 9ஆம் கட்டையில் தாக்குதல் நடை­பெ­று­வ­தா­க வதந்தியொன்று பரவிய நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நள்ளிரவு நேரத்தில் அக்குறணை முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டார். எனினும், அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் அக்குறணையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

தென்னகும்புர:

தென்னகும்புர பகுதியில் தற்போது பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. 

அல­தெ­னி­ய:

அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. உட­ன­டி­யாத பள்ளிவாசலுக்­கு முன்னால் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்ட­னர்.

ஹேதெனிய:

ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கு கலகக்காரர்கள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். வர்த்தக நிலையத்தின் மேல்பகுதி தீப்பிடித்துள்ள நிலையில், உடனடியாக களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீயணைக்கும் படையினரை வரவழைத்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.