A+ A-

அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சுற்றுச்சூழல் மற்றும் சக்தி அமைச்சர் தாரிக் இப்றாஹீமுக்கும் இடையிலான சந்திப்பு





பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் SACOSAN மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்திருக்கும் மாலைதீவு சுற்றுச்சூழல் மற்றும் சக்தி அமைச்சர் தாரிக் இப்றாஹீமுக்கும் இடையிலான சந்திபொன்று நேற்று (12) இடம்பெற்றது.

இருநாட்டு உறவுகள் குறித்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சுற்றுச்சுழல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மாலைதீவு மற்றும் இலங்கையின் குடிநீர் வழங்கல் தொழில்நுட்பங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.