திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருமலையூற்று பள்ளிவாயல் விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் முயற்சியின் பயனாக கடந்த வருடம் பள்ளிக் காணியில் 20 பேர்ச் அளவிலான காணியை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இனங்கியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்
ஆனால் பள்ளிக்குறிய காணி மொத்தமாக 134 பேர்ச் இருக்கின்றது.
மிகுதி காணியையும் விடுவிப்பது சம்மந்தமாக இன்று (28. 09. 2018) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ராஜபக்ஸ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அடுத்த கட்ட பேச்சுவார்தை இரானுவ தலைமையகத்தில் காணிப் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரிகேடியர் சந்திரசேகரோடு எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 8ம் திகதிக்கு பிறகு பேசுவதற்கும் தீர்மானிக்கப்ட்டிருப்பதாக சந்திப்பின் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இச் சந்திப்பின்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பஸீர், கருமலையூற்று ஜும்மாப் பள்ளியின் தலைவர் ஆசாத், செயலாளர் சுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(ஹஸ்பர் ஏ ஹலீம்)