A+ A-

குடி நீர் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு









கிண்ணியா பைசல் நகர் நபவி பள்ளி வாயல் பின் வீதிக்கான பிரதான குடி நீர் குழாய் இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. 

குறித்த குழாய் நீர் பதிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட் கிழமை கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம்.நிவாஸ் தலைமையில் ஆரம்பமானது.

மக்களின் நீண்ட நாள் குடி நீர் பிரச்சினை அப்பகுதியில் நிலவி வந்ததையிட்டு புதிய குடி நீருக்கான குழாய் நீர் வேலைத் திட்டத்தை நகர சபை உறுப்பினர் எம்.எம்.நிவாஸ் ஆரம்பித்து வைத்தார்.

இக் குழாய் நீர் திட்டத்தால் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் சலாம் அனீஸ், யாகூப் பைசல் ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.