தேர்தலுக்கு முந்திய மதிப்பீட்டை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள அமெரிக்க வொஷிங்டன் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனத்தின் தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (02) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையில் தேர்தல்களின்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸும் கலந்துகொண்டார்.